Wednesday 10 March 2021

 

சின்னாபின்னமாவது நம் நாடு மட்டுமல்ல நம் சந்ததியும் தான்.


தமிழகமும்  புதுவையும். தமிழ் வளர்ப்பு என்ற போர்வையில் நாத்திக பூமியாகி வெகு நாட்கள் ஆகி விட்டன. நாத்திகம் என்ற இந்த நச்சு பாம்பிற்கு இலக்கு என்ன ?
தமிழ் இலக்கியவாதிகள் அனைவரையும் ஏமாற்றி முதலில் நாத்திக வாதியாக்க வேண்டும்.
இதற்கு இவர்கள் கையில் எடுத்து கொண்ட இரு விஷயம். 

1 சமஸ்கிருதம்,

2 பிராமிணர்கள் .


பிள்ளையார் கோயிலில் ஒரு ஆண்டி இருந்தான். பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தாலும் ஆண்டியாக இருப்பதால் சாத்வீகி.

நான் கோவக்காரன் தெரிஞ்சுகோங்க என்றும்  நானும் ரவுடிதான் என்பவர்களின் முதல் இலக்கு இந்த ஆண்டி. . அந்த ஆண்டியை அடிக்கற அடியில் மற்றவர்கள் ஒதுங்கனும்... இந்த போலிகள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கணக்கில் சமஸ்கிருதத்தின் மீதும் பிராமிணர்கள் மீதும் பல அபாண்ட பழிகளை சுமத்தினார்கள். கடவுளை வணங்கும் தமிழ் பற்றாளன் கூட சமஸ்கிருதத்தின் மீதும், பிராமிணர்கள் மீதும் வெறுப்புடனே இருக்க வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் சில கும்பல் செய்ய பக்திமான்கள் கூட நாத்திக கூடாரத்தின் செயல்பாட்டாளர்களாக இருந்தார்கள். சிலர் வேண்டுமென்றே பக்தி வேஷம் போட்ட நாத்திகர்களாக இருந்தார்கள்.
.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இவர்கள் மெதுவாக திருக்குறள், கூட ஆன்மிக புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையையும் தாண்டி கந்த சஷ்டி கவசத்தை கூட கிண்டல் செய்யும் அளவிற்கு சென்று விட்டனர். நௌஷத் என்ற இஸ்லாமிய இளைஞனை ப்ராமின பாடங்கள் படிக்க வைத்து பிராமிணன் போல் நடிக்க வைத்து தேவநாதன் என்ற பெயரில் செக்ஸ் லீலைகள் செய்து .. பிராமினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வரை இவர்கள் தங்கள் காய்களை நகர்த்துகிறார்கள்.
.
எங்கள் ஊரில் ஒரு மூத்த வழக்கறிஞர் மிக பழுத்த நாத்திக பழம் .. இன்று மிகப்பெரும் கடவுள் பக்தர். அவர் சொல்லி தான் பல விஷயங்கள் தெரிய வந்தது. நாத்திகம் என்ற போலி வாதத்தை நம்ப வைக்க இவர்கள் எதை எதையோ பேசுவார்கள், எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள் இந்த கயவர்கள் என்றும்,  பல ஆண்டுகளை நாத்திகனாக கழித்ததற்கு வருந்துகிறேன் என்றும் ஒரு மேடையில் அவர் கூறினார்.  மேலும்  உலகில் 133 தலைப்புகளை எடுத்து அது பற்றிய ஒருவரின் கருத்துக்கள் உலகிலேயே உயரிய கருத்தாகவும், அதுவும் 2 வரிகளில் ஒரு மனிதன் கூற இயலும் என்றால் அவனுக்கு தெய்வ கடாச்சம் இருந்தால் மட்டுமே முடியும் ஆகையால் திருவள்ளுவர் தெய்வப் புலவர். இந்த கருத்திலேயே நாத்திகம் அடிபட்டு போனதால் நான் நாத்திகத்தை விட்டொழித்து வாழ்ந்து வருகிறேன். இன்று நிம்மதியாக இருக்கிறேன் என்றார்.

திருவள்ளுவரின் தெய்வீக  தோற்றத்தை மாற்றுதல், வள்ளலாரின் தெய்வீக தோற்றத்தை மாற்றுதல்.. தேவாரம், திருவாசகம், திருமுருகாற்று படை , நாலாயிரம் பாடல்கள் அடங்கிய பிரபந்தம், மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமூலரின் திருமந்திரம் .. திருமுறைகளின் மற்ற நூல்கள் இவை எல்லாம் வளர்க்காத தமிழை பராசக்தியின் வசனமும், வேலைக்காரி போன்ற நூல்களும் .. நிர்வாண கிளப் உறுப்பினர் பற்றிய புத்தகங்களும் கொடுக்கும் ..என்று சொல்லும் தமிழ் இயக்கங்கள் தான் இன்று அதிகம் .  இதற்கு ஊன்று கோள்கள் நக்கீரன் போன்ற துர்நாற்றம் நிறைந்த பத்திரிகைகளும் .. சீன சித்தாந்த கம்யூனிஸ்ட்களும், மிஷனரிகளின் சில்லறைகளை வைத்து சித்து விளையாடும் சில லெட்டர் பேட் இயக்கங்களும்.

இவர்களை இயக்கும் ஆதார இயக்கம் திமுக என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி. என்ன கொடுமை என்றால் இவர்களின் தொண்டர்கள் அதிகம் பேர் மிக நல்ல ஆன்மிக வாதிகள் .    
ஆ.ராசா...வன்னியர்களின் எதிரி ..ஆர்.எஸ்.பாரதி... பட்டியல் இனத்தவர்களின் எதிரி... தேவேந்திரகுல வெள்ளாளர்களை அறவே பிடிக்காத தலைமை.. ஜாதிய சிறுபான்மை என்பதால் ரெட்டியார், யாதவர் இவர்களை ஒதுக்கும் தலைவர்கள். கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி... இவர்கள் அனைவரும். ஹிந்து மத விரோதிகள். கருணாநிதி இந்துக்களை திருடர் என்றார்.  நெற்றியில் இருக்கும் குங்குமத்தை இரத்தமா என்றார். தீ மிதித்த அமைச்சரை கண்டித்தார் ...ஸ்டாலின் இஸ்லாமிய மேடையில் ஹிந்து திருமணத்தை விமர்சித்தார் ... அதே திருமணத்தில் அரபியில் ஓதிய பாத்தியா அவருக்கு புரிந்ததா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.. கனிமொழி.. தூத்துக்குடி பேராயர்களிடம் நல்ல பெயர்  வாங்க  திருப்பதி பெருமாளை இகழ்ந்து தன் தொகுதியை தக்க வைத்து கொண்டார். தேர்தலுக்கு மட்டும் அவர் நாடார். உதயநிதி பிள்ளையார் விக்ரகத்தை இகழ்ந்தார். இவர்கள் கட்சி ...ஹிந்துக்களின் சித்திரை மாத  புத்தாண்டை பத்தாவது மாதமான தை-யில்  தொடங்குவதாக ஒரு புருடா விட்டது. ஆட்சியில் இருந்தபோது அதற்கென ஓர் சட்டமும் இயற்றி ஹிந்துக்களை இம்சித்தது.  அதுபோல் கிருஸ்துவ புத்தாண்டு அக்டோபரில் தான் என்றோ  ... முஸ்லிம்களின் புத்தாண்டு ஷவ்வல் மாதத்தில் தான் என்று சொல்ல திராணி உண்டா ?  
.
சரி தமிழுக்கு இவர்கள் செய்த நன்மை என்ன ... அகத்தியரின் கண்டு பிடிப்புகள் அச்சில் ஏற உதவி இருக்கிறார்களா? ராஜராஜ சோழன், உவே.சா , ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னர்கள் இவர்கள் புகழை பார் புகழும் அளவில்..  குறைந்த பட்சம் பாரதம் புகழும் அளவிலாவது எடுத்து சென்று இருக்கிறார்களா? .
.
இலங்கையில் தமிழர்கள் இறக்கும் வேளையில் போலி உண்ணாவிரதம் இருந்து அரசியல் வாழ்கையை தக்கவைத்து கொள்ள நாடகமாடியவர்கள் இவர்கள். இவர்களா தமிழின் காவலர்கள்.?  ஆட்சியில் ஊழல், கொள்கையால் ஹிந்து விரோதம்.. கூட்டமாக கொள்ளையடித்தல், குடும்பமே கழகம். கலவரத்தின் ஊற்றுக்கண்.. குட்டி ராஜாக்களின் கட்சி .. தொண்டர்களை புறக்கணிக்கும் கிராதகர்கள் இவர்களுக்கு பின் ஆரம்பித்த கட்சியில் எல்லாம் போஸ்டர் ஒட்டி உழைக்க ஆரம்பித்தவர் எல்லாம் உயர் பதவியில் இவர்களோ , மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் என்று கட்டியம் கூறி கொண்டு வலம் வருகிறார்கள் . ஆன்மிகத்திற்கு மதிப்பில்லை, தமிழுக்கு தொண்டு இல்லை, தமிழர் நலன் இல்லை, தொண்டனுக்கு வாழ வழியில்லை, ஹிந்து என்று சொன்னாலே வெறுப்பு... இப்படி வெகுஜன விரோதிகளான இவர்களை இன்னுமா பல்லக்கிலேயே பவனி வர அனுமதிக்க போகிறோம். முடியட்டும் முடியாட்சி. முழங்கட்டும் தேசியத்தின் சங்கு. கைகோர்த்து தேசியம் காப்போம். உலகின் குருவாய் பாரத அன்னையை உயற்றுவோம். சிந்தித்து செயல்படும் நேரம் இது. சிந்தனைகளை சிதற விட்டால் சின்னாபின்னமாவது நம் நாடு மட்டுமல்ல நம் சந்ததியும் தான். நினைவிற்கொள்வோம். .. ஜெய் ஹிந்த்.

Monday 1 March 2021

 

ஹிந்தி எதிர்ப்பும் .. திமுக வும்

சமீபத்தில் திரு குலாம் நபி ஆசாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
.
விழாவில் அனைவருக்கும் ஓர் ஆச்சரியம் காத்து இருந்தது. நிற்க ..

நடராசன், தாளமுத்து  இவர்களை தெரியுமா தெரியுமா?

1939 ல் இவர்கள் இருவரும்.. 1965 ல் இன்னும் பத்து பேரும் .. இறந்தார்கள்.. காரணம் மொழி போர் என்ற தூண்டப்பட்ட வெறி. தங்கள் வருங்கால அரசியல் வாழ்வு வேறு எப்படியும் அமையாது .. எதையாவது ஒரு வெறியை தூண்டி தான் மக்களை நம் பக்கம் ஈர்த்து தங்கச்சுரங்கமான ஆட்சிக் கட்டிலை கைப்பற்ற வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைந்தது.
.
அதற்கேற்றார் போல் - ஜமீந்தாரர்களாக வளம் வந்த காங்கிரெஸ் கட்சியினர், சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்றைக்கு இருந்தாலும் ஆட்சி நம்முடையதுதான், இவர்கள் என்ன செய்து விட போகிறார்கள் என்ற மிதப்பில் இருந்தனர் . சுதந்திரம் வாங்கிய காங்கிரெஸ்-ற்கும்  ஆட்சி கட்டிலுக்காக வயிறு வளர்க்கும் காங்கிரெஸ்-ற்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லை என்பது இன்றளவில் கூட பலருக்கு புரியாமல் இருக்கிறது.  

தென்பகுதி பாரதம்.. பாரத நாடு என்ற தார்மீக அடிப்படை உணர்வில் இருந்து துண்டாடப் பட வேண்டும் என்று குள்ள நரி கால்டுவெல் பாதிரி-ஒப்பிலக்கணம் என்றும் திராவிடர் என்றும் ஆரியர் என்றும் கட்டு கதைகளை கிளப்பி விட்ட நாளில் இருந்து, தமிழகம் பிரிவினை வாதிகளை இன்றளவும் சந்தித்து வருகிறது என்பது நிதர்சனம்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தங்கள் மொழி மீது ஒரு அபரிதமான நம்பிக்கை இருந்தது.. எத்தனை மொழி வந்தாலும் நம் மொழி அழியாது என்று. கேரளா, ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரி மாநிலங்கள்தான் ஆனால் அங்குள்ள சாமானியனுக்கு கூட  சமஸ்கிருதம், ஹிந்தி பரவலாக  தெரியும். கிட்டத்தட்ட மதராஸ் மாகாணமும் அப்படியே . ஆனால் வெள்ளைக்காரன் விதைத்த விதை இங்கு மட்டும் விருஷமாக வளர்ந்து இருந்தது. சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாடிய கயவர்கள் மிக சிறந்த அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் .. பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் கேவலம் என்ன வென்றால் இந்த பொய்கள் எங்கே எடுபட போகின்றன என்ற மெத்தன போக்கினால் இவை கண்டுகொள்ளப் படாததால். திரும்ப திரும்ப சொல்லி இந்த பொய்கள் இளைஞர்கள் மத்தியில் ஆணித்தரமாக போலி பிம்பமாக உருவெடுத்து அதுவும் இன்று வரை நீடிக்கிறது.
.
பயணச்சீட்டு என்று சொல்லாமல் டிக்கெட் என்று சொல்வதால் தமிழ் அழிந்து விடும் என்பதை விட ஒரு பொய் இருக்க முடியுமா கூறுங்கள். 
.
இவர்கள் மொழி வெறிக்கு இன்னொரு உதாரணம்.  ஸ்ரீரங்கம் என்பது திருவரங்கம் என்று மாற்ற படாவிட்டால் தமிழ் அழிந்து விடும் எனும் இவர்கள். இன்று வரை அறம்கண்டநல்லூர் என்ற ஊர் அரகண்டநல்லூர் என்று அழைக்கப் படுவதையோ. தஞ்சாவூர் என்பது டாஞ்சூர் , டுடிகொரின் , என்று அழைக்கப்படும் ஆங்கில வடிவங்களையோ எதிர்க்க வில்லை ஏன் என்றால் இவர்களின் குரு ஆங்கிலேயர்கள் .     
 

தமிழகம் என்று பேர் கொடுக்க வேண்டிய இடத்தில் அரசியல் பேரத்தாலும், மத்திய அரசின் மொழி அறிவு இல்லாமையாலும், நம் மாநிலம் தமிழ் நாடு என்று பேர் பெற்றது. பாரத நாட்டின் அங்கத்தில் எப்படி இன்னொரு நாடு.  ஏன் ?    
என்று இருந்தாலும் தனி தமிழ்நாடு என்ற அந்த விஷச்செடியின் வேறாக இந்த பெயர் மாற்றம் இருக்க வேண்டும் என்பது இந்த வெளிநாட்டு சக்திகளின் நோக்கம்.
.

இவர்கள் தமிழக மக்களுக்கு , குறிப்பாக இளைஞர்களுக்கு கற்று கொடுத்த கெடுமதி செயல் .  தீக்குளிப்பு. இவர்கள் வரலாற்றில் இன்று வரை,  தலைவனின் வீட்டில் இருக்கும் ஒருவராவது தீக்குளிக்க எத்தனித்து இருக்கிறார்களா என்றால் இல்லை. பாவம் எல்லாம் அப்பாவி உணர்வு தூண்டப்பட்ட இளைஞர்கள்.  
.
இப்படி பத்து ஏமாளிகள் கிடைத்தார்கள் இவர்களுக்கு ஹிந்தி எதிர்த்து தீக்குளிக்க, உயிர்துறக்க. ஆம் தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக என்று முழக்கமிட்டபடியே
         கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் முழக்கமிட்டபடியே  இதையடுத்து   தீக்குளித்தார்.   , கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் கட்டாய ஹிந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பெயர் மொழிப்போர் தியாகிகள்.. ஒவ்வொரு ஜன.25 ம் இவர்களுக்காக விழா எடுக்கப் படுகிறது. அந்த மாதத்தில் பல ஊர்களில் மொழிப்போர் கூட்டங்கள் நடத்தப்படும். இப்பொழுதெல்லாம் அந்த கூட்டங்களுக்கு முக்கிய பேச்சாளர்கள் திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் கலந்து கொண்டு. உணர்ச்சி வசமாக பேசுவார்கள்.

 


.
அட ஏமாளி மொழிப்போர் தியாகிகளே நீங்கள் போட்ட அஸ்திவாரத்தில் அருமையாக மாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்பவர்களை வாழ வைக்கும் மொழி எது தெரியுமா? அது ஹிந்தி .. ஹிந்தி.. ஹிந்தி .. ஹிந்தி மட்டுமே.
.
உங்கள் தலைவர்கள் ஹிந்தியில் நோட்டிஸ், போஸ்டர் அடிக்கிறார்கள், ஹிந்தியில் வாக்கு கேட்கிறார்கள். உங்களை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொன்ன அதே காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் இவர்கள். மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவோம் ..    
.
சமீபத்தில் திரு குலாம் நபி ஆசாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
.
விழாவில் அனைவருக்கும் ஓர் ஆச்சரியம் காத்து இருந்தது..
என்ன தெரியுமா? விழாவில் மொழிப்போர் தியாகிகள் தின சிறப்பு பேச்சாளர் திருச்சி சிவா அவர்கள் மதுர கானம் பாடியது தான்.  எந்த மொழியில் .. தமிழிலா .. திருப்புகழ் பாடினாரா... தேவாரம்.. திருவாசகம்.. அட சினிமா பாட்டுங்க சினிமா பாட்டு அதுவும் ஹிந்தி சினிமா பாட்டு ..   
.
எனக்கு கூட ஒன்று இரண்டு ஹிந்தி சினிமா பாட்டு ஒரு நாலு வரி தெரியும்... ஆனால் ஹிந்தி புரியாது..

ஆனால் .
திருச்சி சிவா ஹிந்தியில் பாடி, பேசி அங்கே இருந்தவர்களை மகிழ்வித்தார் .. மற்றவர்கள் கூட பார்த்து பாடினார்கள் இவர் மனப்பாடமாக பாடினார். ஒரு பாடல் அருமையாக பாடியதால் .. இன்னொரு பாடலும் பாட அழைத்தனர்..   
.
அட அட என்ன ஹிந்தி அறிவு..  
.
மற்ற கட்சிகளில் போஸ்டர் அடித்தவன் அடிப்படை போராட்டம் செய்தவன் எல்லாம்  பெரும் பதவி பெற்று உள்ளான்.  
.
இங்கு இன்னும் தொண்டன், விஷ பாட்டில், மண்ணெண்ணெய், தீப்பெட்டி யுடன் அலைந்து கொண்டு இருக்கிறான் தலைவனின் ஒரு உத்தரவிற்காக.
  
.
கூடவே பட்டுகோட்டையார் பாட்டு அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா?

என்ன செய்தார்கள் இவர்கள்.. ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி எழுத்தின் மீது தார் பூசுவது, ரவுடியிசம் இப்படி இரண்டு மூன்று தலைமுறையே ஹிந்தி படிக்காமல் செய்து அவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிகொண்டது தான் மிச்சம்.
.
தமிழ் நாட்டில் பத்தாவது படிக்கும் மாணவனுக்கு தமிழில் சரியாக எழுத வரவில்லை. இவர்கள் கட்சி பதாகைகளில் எல்லாம் அடைமொழிகள் எல்லாம் அவலமான தமிழில். ஆம் வரலாறே  என்பது “ வரலாரே “ என்றும் விடிவெள்ளி என்பது விடிவெள்லி என்றும் இருக்கின்றன. இவர்களின் தலைவனோ பகிரங்கமாக என்று கூட உச்சரிக்க தெரியாமல் பஹிங்கரமாக என்று உச்சரிக்கிறார்.    
.
தமிழ் கும்மிடிபூண்டி கூட தாண்டாமல் பார்த்து கொண்ட இவர்கள் .. எதோ தமிழின் ஏக போக உரிமையாளர்கள் போல் பேசுவார்கள். தமிழன் இலங்கையில் செத்துக்கொண்டு இருந்த போது இங்கு போலி உண்ணாவிரதம் இருந்த இவர்கள் தமிழ் தமிழ் தமிழ் என்று கரடியாய் கத்தி கொண்டு வருவார்கள் உங்களிடம் ஏன் என்றால் இது ஓட்டு பிச்சை நேரமல்லவா.
.
.
 மறக்காமல் கேளுங்கள் அவர்களிடம் எழுஞாயிறு என்று தூயத்தமிழில் சின்னத்தின் பெயரை கூட வைத்து கொள்ளாத நீங்களா தமிழின் காவலர்கள்?  என்று ...