கிரிக்கெட் விளையாட்டும்
வாழ்க்கை பாடமும்
19-01-2021 இந்திய
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இமாலய சாதனை.
31 வருடமாக
பிரிஸ்பேன் காபா மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட இழக்காத ஆஸ்திரேலியாவை
இந்தியா துவம்சம் செய்து வரலாற்று வெற்றியை பதித்து கோப்பையையும் வெற்றி பெற்றது.
இவை அனைத்தையும் விட
மிகப்பெரிய சாதனை என்ன வென்றால் கேப்டன், பேட்ஸ்மேன், பவுலர், விக்கட் கீபர் என்று முழு பட்டாளமும் அனுபவம் மிகவும் குறைந்த வீரர்கள்.
கோலி , ஷிகர் தவான்,
விகாரி, அஷ்வின், ஜடேஜா, ஷம்மி, பும்ரா, உமேஷ் என மிகப்பெரும் பட்டாளம் களத்தில்
இறங்க முடியா நிலையில் பெஞ்ச் அணி என சொல்லக் கூடிய அணியை மேலாளர் ரவி சாஸ்திரி,
கேப்டன் ரஹானே நடத்தி சென்ற விதம் மிக அருமை.
முதல் போட்டியில்
ஒட்டுமொத்த அணியும் கடைசி ஆட்டக்காரர் எடுக்கும் ஓட்டங்கள் கூட எடுக்க முடியாத
அளவு 36 ஓட்டங்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்து. அணியும் வலுவிழந்து , 2-ம் போட்டி
ஆரம்பிக்கும் நேரம் ஒட்டுமொத்த ஜாம்பவான்கள், கிரிக்கெட் வரலாற்றில் சொல்லப்படும்
வொயிட் வாஷ் என்ற பதத்தை குறிப்பிட்டு...
இனி அனைத்து போட்டிகளையும் ஆஸ்திரேலியா எளிதில் வென்று விடும் என்றனர்.
இந்த ஆரூடத்தை
எல்லாம் பொய்யாக்கி வெற்றி, சமன், வெற்றி
என மீதி மூன்று போட்டிகளையும் வழி நடத்தி..இறுதியில் தொடர் வெற்றி
பெற்றது...வரலாற்றில் இடம் பெற்றது.
.
அட அருமை ஆனால் இளைஞர்களுக்கு இதில் ஒரு
நல்ல பாடம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டவே நான் கீழ் வரும் வரிகளை எடுத்துக்
கொள்ள விழைகிறேன் ..
அது என்ன!
பலவீனமே மரணம்,
துணிவே வாழ்வு என்று முழங்கிய 19ம்
நூற்றாண்டின் மகான் சுவாமி விவேகானந்தர் இந்த தருணத்தில் நினைவு கூற வேண்டியவர்.
தோல்வி என்பது
வாழ்க்கையில் சகஜம். தோல்வி இருதயத்திற்கும், வெற்றி தலைக்கும் செல்லாமல் பார்த்து
கொள் என்று அறிவுரை கூறுவது வழக்கம். இரண்டுமே சொல்வதற்கு சுலபம் நடைமுறைக்கு
கடினம். அதிலும் தோல்வி மனதை பாதிக்கா வண்ணம் அணுகுவதில் மிக பெரிய மனிதர்களே
தோற்று இருக்கிறார்கள். சினிமா புகழ் ஜீவி யில் ஆரம்பித்து ஒரு இருதய அறுவை
சிகிச்சை நிபுணர் வரை.
எப்படி இருக்கிறது
இன்றைய இளைய சமுதாயம். தோல்வியே
சந்திக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள் . படுதோல்வி அடைந்தாலே நமகென்று எதோ ஒரு வாசல் திறந்து இருக்கும் என்ற பக்குவம்
இருக்க வேண்டிய இளைஞர்கள் பட்டாளம் , சிறு சரிவை கூட பொறுத்துக் கொள்வதில்லை. இதை கிண்டலாக நான் சொல்வதுண்டு.” அப்பளம் நொறுங்கியதற்கெல்லாம் வருத்தப்படும்
நிலையில் மனித மனம் பலவீனமாக உள்ளது என்று ..” எனது சகோதரரின் கல்லூரி நண்பர் ஒருவர் வாழ்வின்
மிக உயர்விற்கு சென்று தன்னுடைய மணிவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது எனக்கு
ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால் என் சகோதரருக்கு அப்போது 54 முடிந்து 55. அவரை விட
இவர் 6 வயது மூத்தவர்.
.
இந்த இடைவெளி எப்படி என்று விசாரித்த போது ஆச்சரிய பட்டு போனேன். ஆம் அவர்
சந்தித்த தோல்விகள் அவ்வளவு. ஐந்தாம் வகுப்பில் கல்வி இடை நிற்றல் தமிழில்
சொன்னால் டிராப் அவுட்.. 11ம் வகுப்பில் தோல்வி, puc யில் தோல்வி ...குடும்ப சூழ்
நிலை காரணமாக பட்டபடிப்பில் சேர ஒரு வருடம் தாமதம் இதையெல்லாம் தாண்டி சாதித்து வாழ்க்கையில்
முக்கிய நிலையை அடைந்தார்.
இவ்வளவு ஏன் நம்
வீரத் துறவி சிகாகோ செல்ல முடிவெடுத்ததில் இருந்து. அங்கு மேடை ஏறும் வரை அவர்
பெற்ற தோல்விகளும் துன்பங்களும் தான் எத்தனை எத்தனை.
.
இதெல்லாம் இளைஞர்களுக்கு புரிய வாய்ப்பில்லை ஆனால் இந்த கிரிக்கெட் நிகழ்வு
இவர்களுக்கு பலவற்றை புரிய வைக்கும் . ஆம்
வாழ்க்கையில் பணக்காரர்களால் தான் இந்திய அணியில் சேர முடியும் என்ற
நிலையில் நடராஜனும், சிராஜ் ம் கீழ் மட்ட வருமான குடும்ப சூழலில் இருந்து வர
முடிந்தது என்பதற்கு அவர்களிடம் இருந்த திறமையையும் தாண்டிய மன உறுதியும்
முக்கியக் காரணம் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பும் இறை
அருளால் அமைக்கப் படுவதே. 100% விளையாட வாய்ப்பு இருப்பதாக இவர்கள் கூட இந்த
தொடரின் தொடக்கத்தில் நினைத்து இருக்க மாட்டார்கள். பகவத் கீதையின் மைய கருத்தான
நிஷ்காம்ய கர்மா .. பிரதிபலன் எதிர்பாராது நம் கடமை என்னவோ அதை நாம் செய்ய
வேண்டும் என்பதாகும். சுந்தர், அஷ்வின், தாகூர், சிராஜ், நடராஜன், ஷுப்மான்
கில் ஆகியோர் கிட்ட தட்ட இதையே பின்
பற்றினர். நடந்தது என்ன ஊர் அறியும்.
.
ஒட்டுமொத்த அணியின் நிலை அதன் மேலாளர் அடங்கிய குழு இவர்களை பற்றி சிந்திப்போமே.
அடிலைட் டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது. இதில் சோகம் என்ன வென்றால்.முதல்
இன்னிங்க்ஸ் ல் லீட் பெற்ற நம் அணி தோற்கிறது ... அதுவும் படு தோல்வி. அணி
ஒட்டுமொத்தமும் 36 ஓட்டங்களுக்குள் சுருண்டு, உலக அரங்கில் நம் மானம் கப்பல் ஏறிய
நாள் அது. அடுத்த போட்டியை எப்படி எதிர்கொள்வது என்ற நிலை. அதுவும்
அடுத்த டெஸ்ட் போட்டி உலக பிரசித்தி பெற்ற கிருஸ்துமஸ் மறுநாள் நடக்கும் பாக்ஸிங்
டே டெஸ்ட் எனப்படுவதாகும். விராட் கோலி க்கு ஒய்வு....ஷமி இல்லை. வலிமையான
ஆஸ்திரேலிய அணி. ஆனால் இந்த நேரத்தில் உறுதியுடன் அணி மேலாண்மை இருந்ததும் அதையே
அணி உறுப்பினர்களுக்கு ஊட்டியதும் தான் இளைஞர்கள் அறிய வேண்டும்.
.
ஆக ஒரு விளையாட்டு , நமக்கு பிடித்த வீரர், நம் மாநில வீரர், நம் ஜாதி வீரர். இப்படியெல்லாம் நம் சிந்தனை ஓட்டங்களை சிதற
விடாமல். இதில் இருந்து இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம் ...
1.
பிம்பங்களை வைத்து அஞ்சுவது பேதைமை
2.
உயிரே போகும் நிலை வரினும் அஞ்சாமை
3.
மனதில் உறுதி வேண்டும்
4.
கடனை செய் பலனை எதிர்பாராதே
5.
கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை.
6.
திட்டமிட்ட வாழ்வே சிறந்தது .
7.
வெற்றி தோல்விகள் வாழ்க்கைப் பயணத்தின்
படிகற்கள் இலக்கு அல்ல.
ஜெய் ஹிந்த்
சூரிய நாராயணன்,
suryg12@gmail.com