Wednesday 2 June 2021

 ஆக்க பூர்வமாக யோசிக்க ஆரம்பிங்க ஹிந்து சகோதரர்களே !

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஹிந்துக்களுக்கு ஓர் கவலை தரும் செய்திதான். ஆனால் இதுவரை நடந்து கொண்டு இருந்த ஆட்சிகள் மட்டும் என்ன பெரிதாக ஹிந்துக்களுக்கு பண்ணி விட்டது என்பதை ஆராய்ந்தால் , நமக்கு கிடைக்கும் விடை ஒன்றும்  பெரிய அளவில் சாதகமானதாக இல்லை.

ஹிந்து தர்மம் என்பது அப்பழுக்கற்ற தர்மம் . இங்கு எந்த ஒதுக்கும் சித்தாந்தமும் இல்லை . அனைத்தும் அரவணைக்கும் சித்தாந்தமே .(Sanathana Ideology is not exclusive ; but inclusive) இங்கு ஏற்ற தாழ்வுகள் சித்தாந்த ரீதியாக கிடையாது . அமைப்பு ரீதியாக சில விஷயங்கள் உயர்வு தாழ்வு போல இருக்கிறது. அப்படி பார்த்தால் கலெக்டர் உயர்சாதி, பியூன் தாழ்ந்த சாதியா . இருவருக்கும் சிவப்பு கலர் உதிரம் தானே என்று நாம் ஒவ்வொரு நாளும் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கொடி பிடிக்க வேண்டியது தான்.


படையெடுப்பாளர்களும், பின் வந்த ஜமீன் முறை அமைப்புகளும், நம்மை பிடித்த சாபக் கேடுகள். 


நம்மை விட்டு சென்ற ஆங்கிலேயர் பல துரோகிகளை நம்மிடையே விட்டு சென்றுள்ளனர். நம்மை சுற்றி நடக்கும் சனாதன எதிர்ப்பு சாதிய கட்டமைப்பு  சார்ந்த விஷயங்கள் , ஆரிய திராவிட இனம் சார்ந்த வாதங்களும் மிக வலுவாக திட்டமிட்டு கட்டமைக்க பட்ட விஷயங்கள் . இதற்கு மிக நீண்ட பின்னணியும் , பண பலமும் இருப்பதால், வற்றாத மனித வளம் கொண்டு இது இயக்கப் படுகிறது. அவர்கள் கட்டமைப்பில் கெட்டிக்காரர்கள் . 

கடவுள் மறுப்பு ,  ப்ராமினர்களை ஹிந்து தர்மத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் , ஆங்கிலேயர் எழுதிய மனு தர்மத்தை வைத்து வாதம் வைத்தல் , வேத மந்திரங்கள் பலவற்றை பற்றி அவதூறு ஏற்படுத்துதல் . இப்படி பல விஷயத்தை ஏற்படுத்திய அவர்கள்..இணையாக மாற்று மதங்களில் உள்ள எந்த குறை பற்றியும் பேச மாட்டார்கள் என்பது மட்டுமல்ல , அவை கிட்டத்தட்ட ஒரு மாற்று மார்க்கம் என்ற பிம்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள். கிட்ட தட்ட பட்டியல் இன சகோதர்கள் பலரிடையே இந்த விஷ விதையை தூவி பலரை மதம் மாற்றியும் , பலரை விளிம்பு நிலையிலும் வைத்து உள்ளார்கள் .


இதை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் கம்பு சுற்றுவதால் சரி செய்து விட முடியாது . நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவிற்குள்  ஒரு விஷயத்தை   பகிர்ந்து அதில் நல்ல பதில்களும் லைக் களும் பெறுவது என்பது உடல் அரிப்பிற்கு சொரிந்து கொள்வது போல் ஆகும். அது சுகமாக இருக்குமே அன்றி அது மருந்தல்ல . நான் ஹிந்து , என் மதம் தான் இந்த உலகத்தில் உயர்ந்த மதம் சாதி சமூக விஷயங்கள் அதில் ஒரு அமைப்பே அன்றி அதுவே என் உயிர்மூச்சல்ல என்று நினைப்பவர்கள் . வீட்டை விட்டு வெளியே வரும்போது சாதி என்ற அங்க வஸ்திரத்தை அப்பால் வைத்து விட்டு . ஹிந்து என்ற அருமையான உடை அணிந்து , செய்யும் ஒவ்வொரு வேலையும் ...ஹிந்து தர்மம் சார்ந்து செய்து இது ஒரு கூட்டமாக தன்னால் கட்டமைக்கப் படுகிற போது இந்த சாதி கட்சிகள், சனாதன தர்ம எதிரிகள் சிங்கத்தின் முன் நிற்கும் முயல் கூட்டமாக சிதறி ஓடுவர். இது ஏதோ  ஒரே நாளில் செய்யக்கூடிய காரியம் அல்ல. அதே சமயம் இது முடியாத காரியமும் அல்ல . ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்(RSS) இதை கிட்ட தட்ட ஒரு ஓர் நூற்றாண்டாக செய்து வருகிறது . அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும் தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் கால்டுவெல் பாதிரியின் புத்திரர்களால் வழி நடத்தப்படுகிறது. இதை மாற்ற நாம் உழைக்க வேண்டியது மிக அதிகம். தமிழ் என் உயிர் மூச்சு என்பான்  ஆனால் தமிழின் உயரிய பொக்கிஷம் ஹிந்து தர்மத்தால் தான் இன்றும் உயிரோடு உள்ளது என்பதனை ஏற்க மறுப்பான் .  திருக்குறளை உலகப்பொதுமறை என்பான் , தன்மையில் பிறன்மனை அபகரிப்பாளனாக இருப்பான் . அவன் பின்னால் ஒரு பெரும் முட்டாள் கூட்டமும் இருக்கும்.   இவ்வளவு கொள்கைக்கும் செயலுக்கும் முரண்பாடு இருக்கும் கூட்டம் இன்றும் வெற்றி பெற்று கொண்டே இருக்கிறது. நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் மிகத் தெளிவாக வேலை செய்கிறார்கள் . நாம் என்ன செய்வதென்று அறியாமலே இவர்களை எதிர்க்கிறோம் பேர்வழி என்று திக்கு தெரியாமல் அலைகிறோம்.  இதற்கு மிகப் பெரும் முட்டுகட்டையாக இருப்பது,  நம்மிடையே இருக்கும் சில பெருந்தன்மைகள், எம்மதமும் சம்மதம் போன்ற முட்டாள்தனங்கள் , நடுநிலையாளர் என்ற ஏமாளி வேஷம், இவை அனைத்தையும் தாண்டி நம் பெருமையை நாமே உணராத நிலை, நமக்குள் சாதி சார்பற்று  கூட்டாக யோசிக்காத தவறு, போன்றவை . 


ஹிந்துக்களே நாம் நம் இழந்த பெருமைகளை மீட்க நம்மிடம் இருக்கும் ஒரு வழி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வெற்றி பாதையில் பயணித்த ஆர்.எஸ் .எஸ் மட்டுமே. இன்றில் இருந்து ஐந்து வருடங்களுக்கு நம்மில் தோன்றும் ஹிந்து தர்ம செயல் எதனையும் சங்கப் பரிவார் அமைப்புகளோடு இணைந்து செய்யக்கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தோமானால் . எழுதி வைத்து கொள்ளுங்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் பல வெற்றிகளுடன் கொண்டாட  முடியும். அப்போது அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் சனாதன  எதிரிகள் சூரியனை கண்ட பனி போல் அழிந்து விட்டதை நாம் கண்கூடாக காண முடியும். 


நன்றை செய்வோம் ! அதனையும் இன்றே செய்வோம்.!!

 ஜெய் ஹிந்த்!


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home