Monday 15 February 2021

 

ஹிந்து பெற்றோர்களே குழந்தைகளோடு பேச நேரம் எடுத்து கொள்ளுங்கள் .

ஒவ்வொரு ஹிந்து குடும்பமும் எப்படி வளர்ந்து உள்ளது என்றால் தாத்தா, பாட்டி, மாமா என்ற உறவுமுறைகளால் ஊட்டி வளர்க்கப்பட்டு வளர்ந்துள்ளது.  அது வரும் காலங்களில் இருக்குமா ?    
90% சதவிகிதம் இருக்காது !

ஏன்? தாத்தா பாட்டி மாமா வோடு இப்போது குடும்பங்கள் இல்லை .
சில குடும்பங்களில் மாமா  என்ற உறவே இருக்க போவது இல்லை. ஒற்றை பெண்ணாக வளரும் கன்னிக்கு திருமணத்திற்கு பின் பறக்கப் போகும் குழந்தைக்கு ஏது மாமா , ஏது சித்தி, ஏது பெரியம்மா  ?  சரி இந்த விஷயத்தை பின்பு பார்ப்போம் ..

பெற்றோர்களே மாதா, பிதா, குரு, தெய்வம்  .. இதை எதோ சந்தங்கள் சேர்ந்த ஒரு சொற்றடராக பார்க்காதீர்கள் ..    
.
இது மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்யா தேவோ பவ என்ற வேத வாக்கியங்களை மட்டும் பிரதிபலிக்க வில்லை .   
.
மாதா-பிதா வே குரு...   குரு--வே தெய்வம் .. என்ற பொருளையும் வழங்குகிறது.
ஆகையால் பிள்ளைகளின் முதல் குரு மாதா , பிதா .. ஆகையால் அவர்கள் தெய்வங்களாக வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதனை உணர்வோம்.   
.
நான் வளர்ந்து ஆளாகி சமூகத்தில் பழகும் போது எனக்கு ஹிந்து, முஸ்லிம், கிருத்துவ, நாத்திக நண்பர்கள் அதிகம். 
.
அவர்களில் யாரேனும் ஹிந்து தர்மத்திற்கு எதிராக ஏதாவது சொன்னால் நான் என் தந்தையிடம் கேட்டு அவர்களை மறுத்து கருத்து கூறுவேன். மேலும் என் பாட்டி சொன்ன கதைகள் மூலம் நானே நேரடியாக சில விஷயங்களையும் எடுத்து சொல்வேன்.

ஆகையால் உங்கள் பிள்ளைகளை  - உயிரே போனாலும் ஹிந்து தர்மத்தின் சாராம்சங்களில் தவறு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ளாதீர்கள்.. என்று சொல்லி கொடுத்து வளர்க்கணும். நமக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாமே அன்றி தவறாக எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை சொல்லி கொடுங்க. 

படையெடுப்பாளர் கும்பல் நாட்டில் புகுந்த பின் அவர்கள் மாற்றி அமைக்க முன்னெடுப்பு எடுத்தது... நம் கலாச்சாரத்தையும், புராணத்தை பற்றியும் நமக்கு இருக்கும் நம்பிக்கையை கெடுப்பது என்பதுதான்.

இதற்காக அவர்கள் கோடி கணக்கில் செலவழித்து உள்ளார்கள் , செலவழித்து கொண்டும் இருக்கிறார்கள்
.
எனக்கு தெரிந்த ஒரு நபர் அவர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அவரின் குடும்பம் ஒட்டு மொத்தமும் கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டது. அவரின் சகோதரர்கள் சர்ச்களில் மிகப்பெரிய பதவிகளில் எல்லாம் இருந்து போப் க்கு நெருக்கமானவர்களாக எல்லாம் வளர்ச்சி பெற்ற குடும்பம். அவர் மட்டும் ஹிந்து தர்மத்தின் மீது ...கிறிஸ்தவம் வியாபார ரீதியாக திணிக்கும் பொய் அனைத்தையும் நம்ப மறுத்தார். ஒரு குரு விடம் சந்தேகம் கேட்டு தெளிவடைந்தார், பின்பு தாய் மதம் திரும்பினார். ஒரு கார்டினல் அளவுக்கு உயர்ந்த ஒரு கிருத்துவ குடும்பத்தில் ஒருவர் தாய் மதம் திரும்பினால் அது கிருத்துவத்திற்கு மிகவும் இழுக்கு என்று உணர்ந்த கிருத்துவர்கள் அவர் வீடு நோக்கி படை எடுத்தனர். அனைவரிடம் ஹிந்து தர்ம சிந்தனைகள் சார்ந்த கேள்விக் கணைகளை தொடுத்தார். காமா சோமா என்று பதிலளித்தனர். கூட வந்து இருந்த.. சதா சர்வ காலமும் ஊழியம் செய்யும் ஒருவரை காண்பித்து இவர் மகன் ஏன் ஊனத்தோடு பிறக்க வேண்டும் இவ்வளவு நாள் இவர் ஏசுவுக்கு செய்த ஊழியம் வீணா.. இவர் சிறு வயது முதல்  ஊழியம் செய்தார் ஏசு ஆசீர்வாதத்தால் படித்தார் , வேலை பெற்றார், திருமணம் பெற்றார் என்று சொல்லும் நீங்கள் அந்த குழந்தையை ஏசு ஆசீர்வாதத்தால் பிறந்தான் என்று சொல்வீர்கள் என்றால் இதுதான் ஆசீர்வாதமா? இப்படி ஆசீர்வாதம் செய்பவர் கடவுளா என்று வருத்தெடுத்தார். சும்மா விடுவார்களா .. இவரே ஹிந்துவாக இருந்து ஹிந்து கடவுளுக்கு ஊழியம் செய்து இருந்தார் என்றால் அந்த குழந்தை ஊனமில்லாமல் பிறக்க ஹிந்து தெய்வங்கள் ஆசீர்வதித்து இருப்பார்களா ? என்று கேள்வி கேட்டு துளைத்தனர்.
.
வாய்ப்பே இல்லை என்றார். அனைவரும் சிரித்தனர்.    

பொறுங்க ..பிள்ளை பேறு மட்டுமல்ல எந்த பேறும் .. ஊழ்வினை பொறுத்து தான். சனாதன தர்மத்தில்  

குறள்:377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

குறள் விளக்கம்:

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

 

 

 

இதுதான் ஹிந்து தர்மம் சொல்கிறது அதைதான் வள்ளுவ பெருமான் பத்து குறளில் சொல்லி உள்ளார் .என்றவுடன் வந்திருந்தவர் அனைவரும் வாயடைத்து போனார்கள் .

எதற்கு இந்த நிகழ்வை குறிப்பிடுகிறேன் என்றால் நம் வீட்டிலேயே ஹிந்து எதிரிகளை வளர்க்க முயற்சிகள் நடக்கிறது. நல்ல குடும்பத்தில் இருந்து வந்த ஒரு நெறியாளர் தன் தொழில் தர்மம் என்று நினைத்து கொண்டு ஒரு ஹிந்து பக்தரை வேண்டுமென்றே (திக்கு முக்காட வைப்பதாக நினைத்து ) மோசமான கேள்விகள் கேட்கிறார். நல்ல வேலை மறுமுனையில் உள்ளவர் கெட்டிக்காரர். இல்லை என்றால் யோசித்து பாருங்கள் .. ஒரு நிமிடத்தில் எப்படி நாத்திகம் பரவி இருக்கும் என்று. ஆனால் வளர்ப்பு சரியாக இருந்தால் அந்த நெறியாளர் அந்த கேள்விகளை தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்.
.
VGP போன்ற மிகபெரிய செல்வந்தர்கள் தங்கள் நிறுவனங்களில் பலவேறு விதங்களில் ஹிந்து எதிர்ப்பு கருத்துக்களை ஹிந்து மதம் சார்ந்திருக்கும் பணியாளர்களிடம் நிர்பந்திப்பதை எல்லாம் கேள்வி பட்டு இருக்கிறேன். அங்கெலாம் பணிபுரியும் நம் குழந்தைகள் மன உறுதியோடு இருக்க வேண்டும். சூப்பர் சிங்கர் போன்ற தேன் கலந்த விஷ நிகழ்சிகள் .. பார்ப்பவரை மட்டுமல்ல .. பங்கேற்பாளர்களையும் மறைமுகமாக ஹிந்து மதத்தில் இருந்து தூர அழைத்து செல்ல வேண்டிய எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது.  

இப்படி கல்வி நிறுவனம், பணியிடம் என்று ஆரம்பித்து கேளிக்கை அரங்கம் வரை எங்கும் ஹிந்து துவேஷம்.... கண்டிக்காமல் இருக்கலாம், ஆனால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்பது நம் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். கண்டு கொள்ள ஆரம்பித்து விட்டோம் என்று தெரிந்தாலே மாற்றங்கள் ஆரம்பித்து விடும்.

கருத்தாய் இருப்போம்.. சனாதன தர்மத்தை கருவறுக்க நினைப்போரை எதிர்ப்போம்.

---ஜி.சூரிய நாராயணன், suryg12@gmail.com

 Published by Vijayabaratham weekly in the issue dt.19.3-2021

https://dhinasari.com/general-articles/194630-take-time-to-interact-our-children.html


.
   

  

Friday 5 February 2021

 

கொலை கொள்ளைகளை மிஞ்சும் உறைய வைக்கும் உண்மைகள்

நாட்டில் என்ன நடக்கிறது நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்க பட்ட அரசு ஒரு சட்டத்தை இயற்ற அருகதை அற்றதா ? தெளிவாக இதுதான் எங்கள் திட்டம் என்று தேர்தல் அறிக்கை விட்டு , வெற்றி பெற்ற அரசு அதனை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்துவது தானே ஜன நாயகம்.

.

இல்லை .. இல்லை அது இல்லை .. உலகில் பல மாபியாக்கள் இருக்கிறார்கள் .. மிகவும் பலம் வாய்ந்தவர்கள். MMM  Men, Mission, Money இப்படி ஆள் பலம், இயக்க பலம் பண பலம் நிறைந்தவர்கள். அவர்கள் சொல்வது பதவியா பணமா எது வேண்டுமானாலும் அனுபவித்து கொள்ளுங்கள்.. ஆனால் நிர்வாகத்தில்  நாங்கள் எங்கு இடித்து உரைக்கிறோமோ அந்த விஷயத்தில் இருந்து விலகி கொள்ளுங்கள் இல்லையேல் நடப்பதே வேறு.

ஆம்... இதில் குறிப்பாக பாரதம் முன்னேறக் கூடாது. கிட்டத்தட்ட மெக்காலே இந்தியர்களை வைக்க நினைத்த நிலை. இந்தியர்கள் முட்டாளாகவும் இருக்க கூடாது, தன்னிச்சையாக யோசிப்பவர்களாகவும் இருக்க கூடாது. ஆம் விஷயம் தெரிந்து இருக்க வேண்டும் ஆனால் அந்த விஷயம் மேலை நாட்டினரால் நாம் பெற்றது ஆகையால் அவர்கள் ஆணைக்கிணங்க தான் அதை நாம் அணுக வேண்டும் என்ற கல்வியையே லார்டு மெக்காலே விதைத்தான்.  இப்போது அந்நிய சக்திகள் இந்திய அரசையும் அவ்வாறே எதிர்பார்கிறது .. யாரோ போட்டி போடுங்க .. யாரோ பதவிக்கு வாங்க ஆனா உங்கள் இஷ்டப்படி இந்தியா இயங்கக் கூடாது. குறிப்பாக உலக அரங்கின் உன்னத நிலைகெல்லாம் பாரதத்தை இட்டு செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல கூடாது. இதை குலைக்க எங்களிடம் பல உபாயங்கள் உண்டு... எங்களது ச்லீபேர் செல்கள் மொழி வெறியர்களாய், பிரிவினை வாதிகளாய், போராட்டக்காரர்களாய், அமைதி வழி கருத்து உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள். be careful என்கின்றன..
.
பணமதிப்பிழப்பு, ஆர்டிகிள் 370, CAA, ராமர் கோவில் பிரச்சினை தீர்வு , ஆத்மநிர்பார், கொரோனா மருந்து  இப்படி இந்தியாவின் சுய விஸ்வரூபம் இவர்களை அசைத்து பார்த்து விட்டது. CAA வழியாக தேசத்தில் காலூன்ற நினைத்த இவர்களின் எண்ணத்தில் கொரானா ரூபத்தில் இடி விழுந்தது. இப்போது அதை வேளாண் சட்டங்கள் வழியாக தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள்.  

 

சட்டமே இயற்ற தெரியாத அரசாக இருந்தாலும் ஒரு ஷரத்து கூடவா சரியாக எழுதாமல் போய் விடும். 3 வேளாண் சட்டங்களிலும் ஒரு சட்டம் கூடவா விவசாயிக்கு அனுகூலமாக இல்லாமல் போய் விடும். அப்போ அதை எதிர்ப்பவர்கள் உண்மை விவசாயி ஆக இருந்தால் என்ன சொல்வார்கள் இது இது எங்களுக்கு ஒத்து வரவில்லை அதை மாற்றி சட்டம் இயற்றுங்கள் என்றுதான் சொல்வர். ஆனால் இவர்கள் கோரிக்கை என்ன? ஒட்டு மொத்த சட்டத்தையும் வாபஸ் வாங்கு என்பது. ஆண்மை உள்ள எந்த அரசும் இப்படி ஒரு கோரிக்கையை ஏற்காது.   
.
ஆம் அதுதான் இவர்களுக்கு வேண்டும்... அதிக நாள் போராட்டங்கள் , அதி நவீன யுக்திகள் இப்படி அரசை திக்குமுக்காட செய்ய வேண்டும். அரசு இவர்கள் யார் என்று அறிந்து கொண்டு அடிபணிய வேண்டும். இதுதான் இவர்கள் நோக்கம்.
.
குடியரசு தினம் அன்று இவர்களின் வெறியாட்டம்  இதை உறுதி படுத்தி விட்டது..
இது ஒரு திட்டமிட்ட சதி என்பது நிரூபிக்க பட்டு விட்டது. இதன் பின்னணி யோசித்தால் குலை நடுங்குகிறது.  
.
ஒரு ஆபாச நடிகை – மியா காலிபா என்ற  வெளி நாட்டு பெண்மணி இந்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதையும் இங்கு இருக்கும் போராட்டக் காரர்கள் ஆதரிக்கிறார்கள் ... எவ்வளவு கேவலம்.
.
தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் இந்தியாவிற்கு எதிரான பரப்புரை க்கு தேர்ந்தெடுத்த பிரபலம்... க்ரீடா தன்பர்க் என்ற ஸ்வீடன் நாட்டு பதினெட்டு வயது சுற்று சூழல்  போராளி.

அவர் ஒரு ட்வீட் மூலம் இந்த போராட்டம் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று உலகம் முழுவதும் குறிப்பு கொடுத்த விஷயம் லீக் ஆகி விட்டது.

இந்த போராட்டத்தை நடத்த ஒவ்வொரு மாதமும் திட்டம் இட படுகிறது என்ன என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் அறிவுரை வழங்கபடுகிறது . இந்த பெண் அனுப்பி உள்ள கடிதத்தில். ஜன 26 ஆன்லைன் மட்டுமல்ல நேரிலும் யார் யாரால் முடியுமோ அவர்கள் போராட்ட களத்தில் இறங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.
.
இந்த சுற்று சூழல் போராளி க்கு விவசாயிகள் நலனில் எல்லாம் பெரிய அக்கறை இல்லை .. அவர் சொல்கிறார்  “ இந்தியாவில் மனித உரிமை மீறல், வன்முறை, மக்கள் மீது கொடூர வேற்றுமை போன்றவை வெகு நாட்களாக இருக்கிறது (இவளின் வயதே 18 – வெகு நாட்களாக என்றால் ?)     

தன் நாடு பற்றியே இன்னும் எதுவும் முழுவதும் அறிந்து கொள்ள முடியா இந்த சிறுவயதில் . இந்தியாவின் ஜனநாயகத்தை இந்த பெண் குறை சொல்கிறாள்.. மேலும் அனைவரையும் தூண்டி விடுகிறாள். எல்லோரும் ஜன 26 போராடுங்கள் , ட்விட்டர் யுத்தம் நடத்துங்கள்.. நீங்கள் கலந்து கொண்ட போட்டோ வீடியோ போடுங்க.அதற்கான கருவிகள் இவை என்று எந்த பெண்மணி போராட்டத்தை தூண்டுகிறார்..    அந்நிய நாட்டு பெண்மணிக்கு இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன.
.
ஒரு டிவி பேட்டியில் ஒரு இடது சாரி சொல்கிறார். கிரேட்டா வே சொல்லிவிட்டார், றிஹானா வே சொல்லி விட்டார். , மியா காலிபா வே சொல்லி விட்டார் விவசாயிகளுக்காக போராடுங்கள் என்று. பாருங்கள் இவர்கள் வாடகைக்கு எடுத்து இருப்பது யார் என்று . ஆபாச நடிகை, பாப் பாடகி, சுற்று சூழல் போராளி என்ற பெயரில் இருக்கும் அந்நிய பாரத நாட்டு எதிரி.

 

போராட்டத்தில் பல CAA போராளிகள்,... CAA போராட்டத்தில் பயன் படுத்திய  அதே உத்தி பயன் படுத்தப் படுகிறது. ஆக போராட்டங்கள் சட்டங்களை எதிர்த்து அல்ல. இந்தியாவின் ஸ்திர தன்மையை எதிர்த்து.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலங்கள் திட்டமிட்ட பரப்புரை செய்ய  வாங்கும் பீஸ் எவ்வளவு என்றால் மயக்கமே போட்டு விழுந்து விடுவீர்கள் :

பிரபலங்களின் விலைப்பட்டியல்...(உறுதிபடுத்தப் படாத தகவல் )

ரிஹானா - $ 449,000

கைலி ஜென்னர் - $ 986,000

கிம் கார்டாஷியான் - $ 858,000

பியான்சே - $ 770,000

கார்டி பி - $ 366,000

நிக்கி - $ 625,000.

"இது எதற்கான விலை?" என்றால்.... சமுக வலைதளங்களில் ஒரு பதிவுக்கு இவர்கள் வாங்கும் விலை இது! கைலி ஜென்னர் ஒரு பதிவுக்கு (பரப்புரை / propoganda) பெறுவது $ 986,000 (ரூ 7,19,49,997.60) - ரூ 7 கோடி!

 

 

ரிஹானா என்ன பதிவு போடவேண்டும் என்று சி.என்.என் செய்தி லிங்கோடு கிரேட்டா டாக்குமெண்டில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டதை அப்படியே காப்பி - பேஸ்ட் செய்திருக்கிறாள் ரிஹானா. ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ இல்லை. வாங்கின காசுக்கு ஊழியம்!

'இவர்கள் எப்படி பிரபலம் ஆகிறார்கள்?' என்றால், தன்னை தானே ஆபாச டேப் எடுத்து வெளியிட்டு பிரபலமாக்கிக் கொள்வது. தங்களை பிரபலமாக்க ஏஜன்சிகளை உபயோகித்து ஊடகங்களுக்கு பணம் கொடுத்து இவர்களை பற்றி பேச வைப்பது.

இது நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இணைந்தே உழைப்போம். தேசம் காப்போம்..

ஒட்டு மொத்த மக்களும் நம் அரசோடு இருப்போம். அந்நிய சக்திகள் ஊடுருவ இடம் கொடோம்.

எம் ஜன்ம பூமி தாயே ..     எம் கர்ம பூமி நீயே

எம் புண்ய பூமி தாயே ..     குல தெய்வம் என்றும் நீயே

 

வாழ்வாம் மலர்தனை உன் திருவடிதனில் படைத்தோம்

ஏழேழு பிறவி தோறும் உனையே வணங்கி வாழ்வோம்

உனதேவல் செய்துயர்வோம்..
.
ஜெய் ஹிந்த்

-G.சூரிய நாரயணன்

in vijayabharatham  website


https://vijayabharatham.org/true-story-murder/



 

 

  

Thursday 4 February 2021

 

 

ராஷ்ட்ரம் தேவோ பவ

 

மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்று நாம் நம் சந்ததியினருக்கு அறிவு பரிமாற்றம் செய்து வருகிறோம்.

ஒரு படி மேலே போய் நம் தர்மம் என்ன சொல்கிறது என்றால் மாத்ரு தேவோ பவ. .பித்ரு தேவோ பவ... ஆச்சர்ய தேவோ பவ... என்பதற்கு அடுத்து அதிதி தேவோ பவ  என்கிறது.. ஆம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் தெய்வத்திற்கு சமானமாக சொல்வது சனாதன தர்மம். இது சார்ந்து நாம் பல புராண நிகழ்வுகளை பார்த்து இருக்கிறோம்..பிள்ளைக்கறி படைத்த நாயனார் சரித்திரம் வரை ..

தினம் ஓர் அதிதி.. (விருந்தாளி)- க்கு உணவளித்து பின்புதான் தான் உண்ணுவேன் என்ற விரதம் இருந்தவர்களை பற்றியெல்லாம் என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன்.
.
நிற்க .. இதற்கும் மேலாக - நம் சந்ததியினருக்கு ஒன்றை சொல்லி தர வேண்டும் என்பது என் அவா.. ஆம்  ராஷ்டிரம் தேவோ பவ.. அதாவது மாதா, பிதா, குரு, தேசம்., தெய்வம் என்று சொல்லி தரவேண்டும். இதையே தேவர் பெருமான்  தேசமும் தெய்வமும் நம் இரு கண்கள் என்று தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்தார். 

 

இது இந்த காலக்கட்டத்தில் மிக அவசியமாகிறது.

தேசமே நமகெல்லாம் கொடுக்குது ... நாமும் சிறிது கொடுக்க பழகணும்... 

என்று வாழ்வோர் சிலரே..  
தேசமே நமெக்கெல்லாம் கொடுக்குது நாம் மேலும் அதனை சுரண்ட பழகணும் என்று வாழ்வோர் பலரே ...இந்த தேசத்தையும் தேசத்தின் பல பகுதிகளையும் அரசியல் என்ற பெயரால் ஆண்டு இருக்கின்றனர்  .
.
எதோ திட்டங்கள் போட்டு தேசத்தின் வளங்களை திருடியவர்களை கூட மன்னிக்கலாம். ஆனால் தேசத்தை காட்டி கொடுத்து உலகெங்கும் சொத்து சேர்த்த எட்டப்பர்களை எப்படி மன்னிப்பது.

 

 

 

அரசியல் வாழ்விற்கு, வருவோருக்கு முதலில் சொல்லி தர வேண்டியது ..
.
பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்..
இதனில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் இதனுணவுண்டு வளர்ந்துள்ளோம்..

 என்ற சிந்தனை.

 

ஏன் திடீர் என்று இந்த சிந்தனை.. .ஆம் குடியரசு நாள் அன்றாவது தேசபற்று கொஞ்சம் கூட இருக்க வேண்டிய நாளில் தேசத்தின் எட்டப்பர்கள், பிரிவினை வாதிகள் அந்நிய கைகூலிகள் .. இவர்கள் நாட்டின் தலைநகரில் நடத்திய வன்முறை .நினைத்தால் நெஞ்சம் கணக்கிறது.. கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. ஆம் இந்த வன்முறையில் டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் என்ற பிரிவினைவாதிகள் பேயாட்டம் ஆடி உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக இதற்கான திட்டம் போட்டு உள்ளனர்.
.
லாலா லஜபதி ராய், பகத்சிங்  போன்ற எண்ணற்ற விடுதலை போராட்ட காரர்களை தந்த அதே பஞ்சாப்... சாராகாரி யில் சண்டையிட்ட அதே பஞ்சாப் மக்களை நினைத்தால் இன்றும் நரம்புங்கள் துடித்தெழும்.. ஆனால் வைரம் விளைந்த அதே பூமியில் தான் பிந்தரன்வாலே, பியான்ட் சிங், சத்வந்த் சிங் போன்ற கொலைகார பிரிவினை வாதிகளும் தோன்றினர்.

இப்பொழுது அதே மாநிலத்தில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் என்ற போர்வையிலே ஒரு தேசபக்தர் இந்த நாட்டை ஆள கூடாது என்ற ஒற்றை குறிக்கோளில் சதி செய்து வருகிறார்கள்.  
.
பாமரனும் கேட்கும் ஒரு கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை .. 

சட்ட்டத்தில் சில தவறு இருக்கலாம் ..ஒட்டுமொத்த  சட்டமே எப்படி தவறாக இருக்கும்? என்று கேட்கிறார்கள்

ஆம் ஒட்டுமொத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுத்த அரசிற்கு சட்டம் இயற்றுவதுதான் ஜனநாயக கடமை.. இயற்றுகிற சட்டம் சரி பார்க்க வேண்டியது பாராளுமன்றத்தின் கடமை. அதையும் தாண்டி இயற்றப்பட்ட சட்டம் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல.

 ஆனால் ஒட்டு மொத்த சட்டமே தவறு என்றால் அது ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் செயலாகும்.  அதைத்தான் இந்த தரகர் கூட்டம் செய்கிறது.


ஜாங்கரி செய்து கொடுத்தால்  ஜாங்கரியில் சுற்று கம்மியாக இருக்கு எனலாம் . ஜாங்கரியில் இனிப்பு போதாது எனலாம்.. ஜாங்கரி கலர் சரி இல்லை எனலாம். இதற்கு பெயரே ஜாங்கிரி என்று வைக்க கூடாது.. பாதுஷா வை தான் நீங்க ஜாங்கிரி என்று சொல்ல வேண்டும் என்று தலைமை சமையல் காரருக்கு ஹோட்டலில் சாப்பிட வந்தவர் சொல்லுவது போல். பல முறை சந்தித்த எல்லா பேச்சு வார்த்தைகளிலும் இதுவரை பல விஷயங்களை திறம்பட சாதித்த.. அண்டை நாடுகளை அடக்கி ஒடுக்கிய ஓர் அரசு சொல்கிறது உங்களுக்கு இதில் என்ன மாற்றம் வேண்டும் தெளிவாக சொல்லுங்கள் என்று... அதெல்லாம் கிடையாது சட்டத்தையே திரும்ப பெறுங்கள் அது ஒன்றுதான் எங்கள் கோரிக்கை என்பது எவ்வளவு கேவலம். முன்பு ஒரு கதை கேள்வி பட்டு இருக்கிறோம் .. ஒரு குழந்தைக்கு தவறாக உரிமை கோரும் தாய்.. குழந்தை யாரிடமும் இருக்க வேண்டாம் நானும் கேட்டு விட்டேன் அவளும் கேட்டு விட்டாள் ஆகையால் குழந்தையை சரி பாதியாக வெட்டி கொடுங்கள் என்றாளாம்.. அதாவது குழந்தை சாக வேண்டும் அரசர் தீர்ப்பில் தோற்க வேண்டும் என்ற அந்த தாயின் அதே எண்ணம் தான் இந்த தீய சக்திகளுக்கு.    
.
இவர்களுக்கு தேச பக்தி என்பதன் அரிச்சுவடி கூட தெரியாது என்பதற்கு .. இவர்கள் குடியரசு தினம் அன்று ஆடிய வெறி ஆட்டமே சாட்சி.   
.
சாம; தான; பேத; முறைகள் முடிந்து விட்டன.    
.
தடி எடுத்தால் தான் குரங்கு அடங்கும் என்றால் அரசு தடி எடுக்கவும் தயங்கக் கூடாது. பஞ்சாபின் பெருமை மட்டுமல்ல ஒட்டு மொத்த பாரதத்தின் இறையாண்மை காக்கப் பட அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம்.   
.
ஆம் அந்த நடவடிக்கை ..நாட்டு மக்களுக்கு தன்னால் உணர்த்தும் 

ராஷ்ட்ரம் தேவோ பவ..... என்ற பதத்தின் முக்கியத்துவத்தை.

 

---G.Surya Narayanan, suryg12@gmail.com


https://dhinasari.com/general-articles/189884-punjab-lions-and-kalistanis.html