இணைவோம் தேசிய நீரோட்டத்தில். படைப்போம் வலிமை மிக்க
பாரதம்.
தெரிந்தோ தெரியாமலோ இம்முறை திமுக ஜெயித்து
இருப்பது தமிழகத்திற்கு நல்லது . ஒரு வழியாக தீரா விடம் அழிய இது வழி வகுக்க
வாய்ப்பு இருக்கு .
திமுக, அதிமுக மாறி மாறி அரசியல்..இதனால் தமிழிற்கும்
தமிழகத்திற்கும் என்ன லாபம் ?
.
ஆட்சி மாறும் போதெல்லாம் செம்மண் குவாரி ஊழல், மணல் குவாரி
ஊழல், பாலம் கட்டிய ஊழல் , சொத்து
குவிப்பு ஊழல், வேலை வாய்ப்பு ஊழல் , கூவம் ஊழல் ,
.
இப்படி இவர்கள் கதை நாறுகிறது. இதற்கு முன்
இருந்தது தேசிய அரசியல் .
.
தேசிய அரசியலில் மிராசுதார்கள் இருந்தார்கள் , தேசிய வாதிகள்
இருந்தார்கள், ஆன்மிக வாதிகள் இருந்தார்கள்.
.
ஆகையால் சொத்து குவிப்பு இல்லை, தேச விரோத
சக்திகள் இல்லை, பொய் இல்லை , இரட்டை நாக்கு குற்றச்சாட்டுகள் இல்லை, இலவசங்கள்
இல்லை ரவுடி ராஜ்ஜியம் இல்லை.
.
தமிழிற்கும் தமிழகத்திற்கு துளியும் எந்த
விதத்திலும் சம்பந்தம் இல்லாத
திராவிடம் என்ற
வெளிநாட்டு ஏஜன்ட்களால் புகுத்தப் பட்ட சித்தாந்தம் பரவியது.
அட அந்த கேவலதிற்குள் தான் எத்தனை சண்டைகள் எத்தனை பித்தலாட்டங்கள் .
நாத்திகர்களும், பித்தலாட்ட காரர்களும் ஜாதி பார்த்து அரசியல் செய்பவர்களும், மதம்
சார்ந்த பிண அரசியலும் தான் இருக்கிறது.
இரண்டு விஷ ஜந்துக்கள் அடித்து கொண்டன ஆனால் மக்கள் தவறாக இந்த ஜந்து
தேவலையா அந்த ஜந்து தேவலையா என்று போட்டி போட்டு அரை நூற்றாண்டிற்கும் மேல் வீணடித்து
விட்டனர். பாணி பூரிகாரன் என்று சொன்ன மாநிலங்கள் உபரி வருவாய் நிதி நிலை அறிக்கை
அளிக்கிறது ஆனால் பாருங்கள் மக்களே நீங்கள் தேர்ந்தெடுத்த இவர்கள் சொல்கிறார்கள்
நாங்க வந்ததில் இருந்து இது வரை நடந்த ஆட்சிகளின் பலன்கள்.... இங்கு ஒவ்வொருவர் மீதும் 2.6 லட்சம் கடன்
இருக்கிறது எங்களால் என்ன செய்ய முடியும் என்று ஐ.பி. நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.
முழுக்க முழுக்க முன்னிற்கு பின் முரண். . ஒரு அமைச்சகத்திடமும் தெளிவு இல்லை.
ஆக இதுவே கடைசி
திராவிட ஆட்ச்யாக இருக்கட்டும் . திரும்புங்கள் தேசியத்தின் பக்கம் .. இணைவோம்
தேசிய நீரோட்டத்தில். படைப்போம் வலிமை மிக்க பாரதம். பாரதி, விவேகானந்தர் கண்ட
கனவுகளை நினைவாக்குவோம்.
This letter appeared in dinamalar dt.15-8-2021
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home