எந்த திட்டத்திலும் வறுமை யில் வாடுவோர் மட்டுமே பயன்
பெற வேண்டும்
தன் சொந்த மக்களை நசுக்கும் சட்டங்களை இயற்றியது இந்தியா வாக மட்டும் தான் இருக்கும் .. இதை கேட்க நாதி அற்று போனது இந்த அரசியல் ஆக்கிரமிப்பு சுதந்திர நாட்டில் . அரசியல் லாபங்களுக்காக இந்த நாட்டின் ஒரிஜினல் பூர்வ குடி ஹிந்துக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் .
ஹிந்துக்களின் பூர்வ குடிகள் , ஹிந்துக்களின் ஆணி வேர் ஆன பிராமிணர்கள் மேல் அபாண்ட பழி சுமத்தும் அரசியல் அமைப்புகள் .. இது ஹிந்துக்களை பலவீன படுத்தி மாற்று மதம் வளர வழிவகை செய்கிறது . இன்னொரு பக்கம் அடித்தட்டு மக்களை இழிவு படுத்தும் தலித் என்ற சொல்லாடல் கொடுத்து ..அவர்களின் இந்த அடைமொழி போக வேண்டுமானால் மதம் மாறுங்கள் என்ற தூண்டுதல் .
ரொட்டிக்கும் , வன்முறைக்கும் மதம் மாறிய மக்களே இன்று பெரும்பாலான ஹிந்து அல்லாத மாற்று மதத்தினர். இவர்களுக்கு சலுகை என்ற பெயரில் பூர்வ குடி மக்கள் பலவாறாக வஞ்சிக்கப் படுகிறார்கள் . ஹிந்து வுக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம்.
ஹிந்து ஒரு கல்வி நிறுவனம் வைத்தால் அவர்களுக்கு ஒரு சட்டம். சிறுபான்மையினர் ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்தால் அவர்களுக்கு சலுகை சட்டம்.
நாட்டை ஆண்ட அந்நியன் இந்த நாட்டின் சொத்துக்களை அபகரித்தான் அங்கு அவனின் வழுபாட்டு தலங்களை நிறுவி அதை பாது காக்க இங்கு இருப்போரை மதம் மாற்றினான். அங்கெல்லாம் கல்வி நிலையங்கள். அவைகளெல்லாம் செழிப்பாக இருந்தாலும் அவைகள் சலுகை பெரும் நிறுவனங்கள் .. ஆனால் ஆஸ்ரமங்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. இந்நிலை மாறனும் படிப்படியாக சலுகைகள் இல்லாத ஆட்சிகள் வளரனும். தேசமெங்கும் ஒரு சட்டம் இருக்கணும்.
எந்த திட்டத்திலும் வறுமை யில் வாடுவோர் மட்டுமே பயன் பெற வேண்டும். இந்த நிலை பாரதத்தில் என்று வரும். 75 வது சுதந்திர ஆண்டில் இந்திய அரசியல் கட்சிகள் இதை நோக்கி பயணிக்க வேண்டும். இதனால் உருவாகும் இந்தியாவே உண்மை சுதந்திர இந்தியாவாக இருக்கும்.
ஜெய்ஹிந்த்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home