ஒன்றிய அரசு - புது டூல்கிட் created on 24-6-2021
ஒன்றிய அரசு - புது டூல்கிட் created on 24-6-2021
மொழிப் பற்றா ? மொழி அரசியலா?
மதராஸ் (சென்னை ) என்பது மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தின் போது தமிழை தன்னகத்தே கொண்டதால் தமிழகம் என்று பெயர் பெற்று இருக்க வேண்டும். தமிழ் நாடு என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு அதுவே நம் மாநிலத்தின் பெயராகி போனது. அன்று முதல் தமிழ் அரசியல் விலைபொருள் ஆனது .
ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி படித்த, நாடாளுமன்ற உறுப்பினர். இவரின் தாய் மொழி தமிழ், ஆனால் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் அவர்களை கொலை செய்த குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலை பற்றி எதற்கு பேச வேண்டும் என்று கேட்டால்.. அவர் தமிழின விரோதி ஆகி விடுவார். ஆனால் சாந்தன், பேரறிவாளன், முருகன் இவர்களுக்கு ஆதரவாக பேசிய ...அம்மணமாக நடித்து புகழ்ப் பெற்ற நடிகர் தமிழ் உணர்வாளர் ஆகி விடுவார். இதற்கு பெயர்தான் தமிழ் பற்றா.
பாரதம் சுததந்திர நாடாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள். நமது மத்திய அரசு வரும் சுதந்திர தினம் 75 வது சுதந்திர தினம் என்பதால் அதை அம்ருத் மகோத்சவ் , என்று கொண்டாட இருக்கிறது. மங்கள் பாண்டே வில் ஆரம்பித்து மருதுபாண்டியர் ,கோகலே , திலகர், படேல், காந்தி,நேரு, சாவர்க்கர், வ.உ.சி, வா.வே.சு, திங்கரே, ஆசாத், பகத்சிங், செம்பகராமன், நேதாஜி, திருப்பூர் குமாரன், வாஞ்சி, பகத் சிங் இப்படி நமக்கு தெரிந்தோர் பலர், தெரியாதோர் எண்ணிலடங்கா. ஆனால் இவர்களை நினைவு கூறும்போது அவர்களின் சாதி, மொழி, இனம், மதம் பார்த்து கொண்டாடுவதில்லை.
சுதந்தரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் இப்படி பல பரிமாணத்தை பெற்றது. ஆனால் வெள்ளையனை நேரடியாக எதிர்க்க இரண்டு சொற்றொடர்கள் ஏற்படுத்தப்பட்டன . அவை கேட்ட மாத்திரத்தில் வெள்ளையன் முகம் இருண்டு விடும். வெறி தலைக்கு ஏறும். மேலே சொன்ன தலைவர்கள் பலரும் இந்த வார்த்தைகளை உச்சரித்ததால் பல இன்னல்களை பெற்று இருக்கிறார்கள்.
அந்த இரு வார்த்தை சொற்றொடர்கள்
வந்தேமாதரம் 2.ஜெய்ஹிந்த்
இவை தாரக மந்திரங்கள் … இதற்கு மொழி கிடையாது. பாரதியார் வெள்ளையனை பார்த்து தாய் மண்ணே வணக்கம் என்று கவிதை எழுத வில்லை. திருப்பூர் குமரன் வந்தே மாதரம் எனும் போதும் ஜெய்ஹிந்த் எனும் போதும் விடுதலை வேட்கை ஓங்கி ஒலித்தது.. ஆனால் அதை தாய் மண்ணே வணக்கம் என்று சொல்லாததாலோ ,, வெல்க பாரதம் என்று சொல்லாததாலோ அவன் தமிழின துரோகி ஆகி விட முடியுமா?.
கேசவ பலிராம் ஹெட்கேவார் மராட்டிய மாநிலத்தில் படித்து கொண்டு இருக்கும் போது வெள்ளைய அதிகாரி பள்ளியின் உள் நுழையும் போது எல்லா வகுப்பில் இருந்தும் வந்தே மாதரம் ஒலிக்க ஏற்பாடு செய்தார்… அதனால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு . பின் ஹெட்கேவார் தவிர மற்றவர்கள் மேல் குற்றம் இல்லை என அவரின் பள்ளி படிப்பு மட்டும் தடை பெற்றது. இருந்தும் தன் விடா முயற்சியால் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் என்ன மராட்டியிலா கோஷம் இட்டார்..
தமிழகம் கொட்டாவி விடும்போது கூட தமிழ் வார்த்தை சொல்லித்தான் விட வேண்டும் .. அப்படி விடாதவன் தமிழனே இல்லை என்று முத்திரை குத்தும் வேலையில் இறங்கி உள்ளவர்களை.. அரசியல்வாதியாக கொண்டு உள்ளது. கடந்த ஐம்பது வருடங்களாக இந்த கூத்து தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
அதன் பரிணாம வளர்ச்சி கற்பழித்தால் கூட தமிழனாக இருந்தால் தப்பில்லை. தட்டி கொடுத்தால் கூட வேற்று மாநிலத்தவர் என்றால் அவர் கவர்னர் ஆனாலும் அவர் வயதை கூட பாராமல் பாலியல் குற்றம் சாட்டும் பேச்சாளர்களை வளர்த்துள்ளது.
.
இதையெல்லாம் தாண்டி எதற்கும் தமிழாக்கம் , எதிலும் தமிழாக்கம் என்று வெறி பிடித்தவர்கள் சட்டம் இயற்றுவோராக அமைவது துரதிர்ஷ்ட வசமாக உள்ளது.
அப்படி ஒரு முட்டாள் தனத்தை ஒரு சட்ட மன்ற உறுப்பினர் சமீபத்தில் அரங்கேற்றி உள்ளார் .. ஜெய் ஹிந்த் சொல்லாததால் தமிழகம் பீடு நடை போட ஆரம்பித்தது என்கிறார். கேட்டால் நான் ஜெய்ஹிந்த் க்கு எதிரி இல்லை அது எழுதப்படும் ஹிந்திக்கு எதிரி என்கிறார். வெல்க பாரதம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்கிறார். இதை மத்திய அரசு அனுமதிக்க போகிறதா ?
முதல்வர் பெயர் தமிழில் இல்லையே இனி அவர்களை இவர் விளிக்கவே மாட்டாரா அவையில் . கவர்னர் தமிழர் இல்லையே அவர் அங்கீகரித்த உங்கள் உறுப்பினர் பதவியை ராஜினமா செய்ய போகிறீர்களா ? ஈஸ்வரன்
.
இந்த தேச விரோதியை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது. . இதில் சட்டம் தன் கடமையை செய்யாவிடில் ..சட்டம் இயற்றிய மாமேதை அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும்
சொல்லுவோம் வந்தே மாதரம்! உரக்க உரைப்போம் ஜெய் ஹிந்த்.!! ஒழிப்போம் மொழி வெறியை .. உருவாக்குவோம் தேசிய சிந்தனையை .. உறுதுணையாய் நிற்போம் மத்திய அரசிற்கு இது சார்ந்து. ஜெய்.ஹிந்த் !!!
Published in Dhinasari - 05-07-2021
https://dhinasari.com/general-articles/214069-politics-around-jaihind.html
தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஹிந்துக்களுக்கு ஓர் கவலை தரும் செய்திதான். ஆனால் இதுவரை நடந்து கொண்டு இருந்த ஆட்சிகள் மட்டும் என்ன பெரிதாக ஹிந்துக்களுக்கு பண்ணி விட்டது என்பதை ஆராய்ந்தால் , நமக்கு கிடைக்கும் விடை ஒன்றும் பெரிய அளவில் சாதகமானதாக இல்லை.
ஹிந்து தர்மம் என்பது அப்பழுக்கற்ற தர்மம் . இங்கு எந்த ஒதுக்கும் சித்தாந்தமும் இல்லை . அனைத்தும் அரவணைக்கும் சித்தாந்தமே .(Sanathana Ideology is not exclusive ; but inclusive) இங்கு ஏற்ற தாழ்வுகள் சித்தாந்த ரீதியாக கிடையாது . அமைப்பு ரீதியாக சில விஷயங்கள் உயர்வு தாழ்வு போல இருக்கிறது. அப்படி பார்த்தால் கலெக்டர் உயர்சாதி, பியூன் தாழ்ந்த சாதியா . இருவருக்கும் சிவப்பு கலர் உதிரம் தானே என்று நாம் ஒவ்வொரு நாளும் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கொடி பிடிக்க வேண்டியது தான்.
படையெடுப்பாளர்களும், பின் வந்த ஜமீன் முறை அமைப்புகளும், நம்மை பிடித்த சாபக் கேடுகள்.
நம்மை விட்டு சென்ற ஆங்கிலேயர் பல துரோகிகளை நம்மிடையே விட்டு சென்றுள்ளனர். நம்மை சுற்றி நடக்கும் சனாதன எதிர்ப்பு சாதிய கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் , ஆரிய திராவிட இனம் சார்ந்த வாதங்களும் மிக வலுவாக திட்டமிட்டு கட்டமைக்க பட்ட விஷயங்கள் . இதற்கு மிக நீண்ட பின்னணியும் , பண பலமும் இருப்பதால், வற்றாத மனித வளம் கொண்டு இது இயக்கப் படுகிறது. அவர்கள் கட்டமைப்பில் கெட்டிக்காரர்கள் .
கடவுள் மறுப்பு , ப்ராமினர்களை ஹிந்து தர்மத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் , ஆங்கிலேயர் எழுதிய மனு தர்மத்தை வைத்து வாதம் வைத்தல் , வேத மந்திரங்கள் பலவற்றை பற்றி அவதூறு ஏற்படுத்துதல் . இப்படி பல விஷயத்தை ஏற்படுத்திய அவர்கள்..இணையாக மாற்று மதங்களில் உள்ள எந்த குறை பற்றியும் பேச மாட்டார்கள் என்பது மட்டுமல்ல , அவை கிட்டத்தட்ட ஒரு மாற்று மார்க்கம் என்ற பிம்பத்தையும் உருவாக்கி வருகிறார்கள். கிட்ட தட்ட பட்டியல் இன சகோதர்கள் பலரிடையே இந்த விஷ விதையை தூவி பலரை மதம் மாற்றியும் , பலரை விளிம்பு நிலையிலும் வைத்து உள்ளார்கள் .
இதை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் கம்பு சுற்றுவதால் சரி செய்து விட முடியாது . நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவிற்குள் ஒரு விஷயத்தை பகிர்ந்து அதில் நல்ல பதில்களும் லைக் களும் பெறுவது என்பது உடல் அரிப்பிற்கு சொரிந்து கொள்வது போல் ஆகும். அது சுகமாக இருக்குமே அன்றி அது மருந்தல்ல . நான் ஹிந்து , என் மதம் தான் இந்த உலகத்தில் உயர்ந்த மதம் சாதி சமூக விஷயங்கள் அதில் ஒரு அமைப்பே அன்றி அதுவே என் உயிர்மூச்சல்ல என்று நினைப்பவர்கள் . வீட்டை விட்டு வெளியே வரும்போது சாதி என்ற அங்க வஸ்திரத்தை அப்பால் வைத்து விட்டு . ஹிந்து என்ற அருமையான உடை அணிந்து , செய்யும் ஒவ்வொரு வேலையும் ...ஹிந்து தர்மம் சார்ந்து செய்து இது ஒரு கூட்டமாக தன்னால் கட்டமைக்கப் படுகிற போது இந்த சாதி கட்சிகள், சனாதன தர்ம எதிரிகள் சிங்கத்தின் முன் நிற்கும் முயல் கூட்டமாக சிதறி ஓடுவர். இது ஏதோ ஒரே நாளில் செய்யக்கூடிய காரியம் அல்ல. அதே சமயம் இது முடியாத காரியமும் அல்ல . ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்(RSS) இதை கிட்ட தட்ட ஒரு ஓர் நூற்றாண்டாக செய்து வருகிறது . அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும் தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் கால்டுவெல் பாதிரியின் புத்திரர்களால் வழி நடத்தப்படுகிறது. இதை மாற்ற நாம் உழைக்க வேண்டியது மிக அதிகம். தமிழ் என் உயிர் மூச்சு என்பான் ஆனால் தமிழின் உயரிய பொக்கிஷம் ஹிந்து தர்மத்தால் தான் இன்றும் உயிரோடு உள்ளது என்பதனை ஏற்க மறுப்பான் . திருக்குறளை உலகப்பொதுமறை என்பான் , தன்மையில் பிறன்மனை அபகரிப்பாளனாக இருப்பான் . அவன் பின்னால் ஒரு பெரும் முட்டாள் கூட்டமும் இருக்கும். இவ்வளவு கொள்கைக்கும் செயலுக்கும் முரண்பாடு இருக்கும் கூட்டம் இன்றும் வெற்றி பெற்று கொண்டே இருக்கிறது. நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் மிகத் தெளிவாக வேலை செய்கிறார்கள் . நாம் என்ன செய்வதென்று அறியாமலே இவர்களை எதிர்க்கிறோம் பேர்வழி என்று திக்கு தெரியாமல் அலைகிறோம். இதற்கு மிகப் பெரும் முட்டுகட்டையாக இருப்பது, நம்மிடையே இருக்கும் சில பெருந்தன்மைகள், எம்மதமும் சம்மதம் போன்ற முட்டாள்தனங்கள் , நடுநிலையாளர் என்ற ஏமாளி வேஷம், இவை அனைத்தையும் தாண்டி நம் பெருமையை நாமே உணராத நிலை, நமக்குள் சாதி சார்பற்று கூட்டாக யோசிக்காத தவறு, போன்றவை .
ஹிந்துக்களே நாம் நம் இழந்த பெருமைகளை மீட்க நம்மிடம் இருக்கும் ஒரு வழி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வெற்றி பாதையில் பயணித்த ஆர்.எஸ் .எஸ் மட்டுமே. இன்றில் இருந்து ஐந்து வருடங்களுக்கு நம்மில் தோன்றும் ஹிந்து தர்ம செயல் எதனையும் சங்கப் பரிவார் அமைப்புகளோடு இணைந்து செய்யக்கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தோமானால் . எழுதி வைத்து கொள்ளுங்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் பல வெற்றிகளுடன் கொண்டாட முடியும். அப்போது அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் சனாதன எதிரிகள் சூரியனை கண்ட பனி போல் அழிந்து விட்டதை நாம் கண்கூடாக காண முடியும்.
நன்றை செய்வோம் ! அதனையும் இன்றே செய்வோம்.!!
ஜெய் ஹிந்த்!