Wednesday 24 November 2021

 

தமிழ் அழிய வேண்டுமா? நாத்திகர்களை ஆதரியுங்கள்

 

தேவாரம் , திருவாசகம், நாலாயிர திவ்யப்ரபந்தம், திருவருட்பா , திருக்குறள் இவை விரைவில் அழியும். ஆம் அதிகாரங்கள் நாத்திகர்கள் இடது சாரிகள் கைகளில் இருந்தால் அவர்கள் , தாங்கள் நினைப்பது எல்லாம் சட்டம் என்று நினைக்கிறார்கள். உதாரணம் கிருஸ்தவ, முஸ்லிம்கள்  அவர்கள் ஆண்டு பிறப்பை எந்த அரசியல் வாதியும் மாற்ற அனுமதிப்பதில்லை. அவர்கள் மத அவதார புருஷர்கள் பிறந்த தினங்கள் அரசு சார்பாகவே கொண்டாட படுகிறது. ஆனால் நம் பண்டிகை தீபாவளிக்கு நாத்திகர்கள் வாழ்த்துக் கூட சொல்ல மாட்டார்கள். அதெல்லாம் சிறு விஷயம். இப்போது இன்னும் மிகப் பெரிய சதி நடக்கிறது. முதலில் திருவள்ளுவர், ராமலிங்க அடிகள் ஆகியோரின் நெற்றியில் இருக்கும் விபூதிகள் அழிக்கப்பட்டன. பின்பு விபூதி பூசிய பசுத்தோல் போர்த்திய நரி ஒரு பெண்மணி ஹிந்துக்களை கொச்சை படுத்தினார்.. மேடையில் இந்நாள் முதல்வரும் இருந்தார். இப்பொழுது ஹிந்து பட்டியல் இனத்தவர் என்ற அடையாளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்.. திருவள்ளுவர் கிருத்தவர் என்பதை பரப்ப ஆரம்பிக்கிறார். என்ன செய்தி இவரை பின் தொடரும் பலரை கட்டாய மதம் மாற்ற முனைகிறார். லாபம் இல்லாமலா செய்வார். ஒருவர் சிவனே கிருத்துவர் என்கிறார்.. இதே அரசியல் வாதிகள் துணையோடு. ஹிந்து பெயரில் உள்ள திருமாவளவன், தமிழன் பிரசன்னா, வன்னிய அரசு, ஆ. ராசா இவர்கள் வீட்டு சாவு சடங்குகள் கிருத்துவ முறைப்படி.. ஆக கிருத்துவத்தை பின்பற்றும் இவர்களை உபயோகித்து பைபிளை தாண்டிய எந்த படைப்பும் பெரிது இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டை கொண்டு வர முனைகிறது ஒரு கூட்டம். விளைவு நம் பொக்கிஷங்களான தேவாரம் , திருவாசகம், நாலாயிர திவ்யப்ரபந்தம், திருவருட்பா , திருக்குறள் இவை விரைவில் அழியும்.. கூடவே தமிழ் அழியும். இதைதான் சொன்னாரா முண்டாசு கவி தமிழ் இனி மெல்லச் சாகும் என்று.  இவர்களுக்கு ஓட்டு போடும் ஹிந்துக்களே நீங்கள் கொள்ளிகட்டையால் உங்கள் தலையை சொரிகிறீர்கள், விரைவில் உங்கள் கையாலேயே உலக பொதுமறையாம் திருக்குறளை எரிக்க வைப்பார்கள். நாத்திகர்கள் - இவர்கள் ஹிந்து விரோதிகள் அல்ல தேச விரோதிகள் ... அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள் 


This got published in dinamalar ithu ungal idam on 21-11-2021


.

 

பணம் படைத்தவன் வைத்தது தான் சட்டமா?

நீட் தேர்வு இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பணம் படைத்த தனியார் மருத்துவ கல்லூரி அதிபர்கள். இவர்களின் தூண்டுதலில் நீட் தேர்வை தமிழகத்தில் எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வால் பலர் பயனுற்றுள்ளனர், சில கோழை மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதில் அனிதா போன்றோர் தவறாக வழி நடத்தப்பட்டதால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். உலக வாழ்வில் வானூர்தியால் சிலர் இறக்கின்றனர், பேருந்து, புகைவண்டி, பலவித பொது தேர்வுகள் இவற்றால் பலர் இறக்கின்றனர். இதற்காக மேற்சொன்ன எல்லாவற்றையும் நிறுத்த முடியுமா? நீட் தேர்விற்கு மட்டும் இப்படி ஒரு டூல் கிட் ஏன் ஏற்படுத்துகிறார்கள் . அதே சமயம் காதல், கள்ள காதலால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக  தற்கொலை, கொலை, கொள்ளை, கழுத்தறுப்பு, கொடூர கொலை இப்படி நடந்து கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணம்  சின்ன திரையும், பெரிய திரையுமே. சில்லுனு ஒரு காதலில் ஆரம்பித்து கைகுட்டையில் காதல் கடிதம் வரைக்கும் ஒரு பெரும் ஆராய்ச்சியே பண்ணி விட்டார்கள். பெண்களை  துரத்தி துரத்தி காதல் வலையில் விழ செய்வதையே பிரதானமாக காவியங்கள் ஆக்கி பல நடுத்தர குடும்பத்தை சீரழித்தவர்கள்  கோடீஸ்வரர்கள் . ஆனால் இவ்வளவு கொலை கொள்ளை க்கு காரணமான திரை படங்களுக்கு தடை என்று பேசாத எல்லா அரசியல் வாதியும் , அறிவு சம்பந்தப் பட்ட நீட் க்கு தடை கேட்கின்றனர். இரண்டிலும் விஞ்சி நிற்பது பணம் படைத்தவன் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்... சட்டம் எல்லாம் ஏழைக்கு மட்டும்தானா ?


This letter got published in ithu ungal idam dt.23-11-2021  dinamalar