Sunday, 16 May 2021

 நன்றி மோடி ஜி 


தேசம் , தெய்வம் இரண்டும் நம் கண்கள் என்றார் முத்துராமலிங்க தேவர் பெருமகனார். அதை கடைபிடிக்கும் ஒரு உன்னதத் தலைவராக வாழும் மோடி அவர்கள் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை ஆக இருக்கிறது . 
.
ஒரு நாளில் விழித்து இருப்பது எவ்வளவு நிமிடங்களோ அது அத்தனையும் நாட்டு, மற்றும் உலக நலன்களுக்காக ஒருவர் வாழ வேண்டும் என்பது ஒரு ஸ்வயம்சேவகனின் சிந்தனையாக இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதை கடைபிடிப்பது கிருஹஸ்தர் (இல்லற வாழ்வில் இருப்போர்) ஆக இருக்கும் கார்யகர்த்தர்களுக்கு சிரமம் ஆனால் ஒரு முழுநேர ஊழியனுக்கு அதற்கான வாய்ப்பு அதிகம்  உள்ளது. அதை முழுவதுமாக கடைபிடிப்பவரே நம் பாரத பிரதமர் மோடி அவர்கள்.
.
நாட்டை சீர்திருத்தி .. எதற்கும் நாம் அடுத்தவர் கையை ஏந்த கூடாத நிலைமையில் வைத்து விட்டால் வரும் ஐம்பது வருடங்களுக்கு நம்மை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்கிற எண்ண ஓட்டம் கொண்டவர். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் 

1. நாட்டில் எங்கும் மதக்கலவரம் , குண்டு வெடிப்பு இருக்க கூடாது 

2.இந்திய மீனவர் நிம்மதியாக இருக்க வேண்டும் 

3. காஷ்மீர் நம் தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகி அங்கு இருப்பவர்களுக்கு தேச பற்று வரும் போது நாட்டில் ராணுவத்தின் அவசியமே இருக்காது  

4.சுத்தம் சோறு போடும், உயிர் காக்கும் ..அதற்காக  ஸ்வட்ச் பாரத்  திட்டம்

5. அனைவருக்கும் வங்கி கணக்கு .. ஜன தன் திட்டம்

6. சுயக் காலில் நிற்க ஆத்மநிர்பார்  திட்டம்.

இது அத்தனையும் செய்து முடித்தார் .

இவைகளின் நடுவே சீனாவும் உலகின் மருந்து கம்பெனிகளும் ஏற்படுத்திய மறைமுக போர் கொரோனா .
.
அதையும் வெற்றி கரமாக சாமாளித்து. சுயமாக n95 மாஸ்க் முதல் தடுப்பு ஊசி வரை தயாராகி இப்போது 2DG என்ற மருந்தும் ராணுவ ஆராய்ச்சி மையத்தால் வர இருக்கிறது. 
.
அரசியல் காரணங்களுக்காக முட்டாள்கள் இது அனைத்தையும் மறைத்து அவர் போடும் உள்ளாடை யில் இருந்து துண்டு வரை விலை வைத்து ... அவர் தாடியை கிண்டலடித்து அவர் மொழியை கிண்டல் அடித்து .. யாரோ இரு முதலாளிகள் பெயரை வைத்து இவரின் பிம்பத்தை உடைத்து... தேசம் இழிநிலைக்கு செல்ல எல்லா வேலைகளும் செய்கின்றனர். என்னை தீயில் இட்டு பொசுக்கினாலும் கடைசி நிமிடம் வரை நான் தேசம் முன்னேற பாடு படுவேன் என உழைக்கும்  ஏழைத்தாயின் மகன் தேசத்தின் தெய்வ மகன் மோடி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த வலைப்பூ வில் நிறைய நன்றி செய்தி போட இருக்கிறேன் உங்கள் ஆதரவை நாடும் ..ஞா.சூரிய நாராயணன்.  

 








0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home